கோவையில் நள்ளிரவில் சாலையில் நின்றிருந்த ஆட்டோ கண்ணாடியை அடுத்து உடைத்த மர்ம நபர் - பரபரப்பு

போத்தனூர் அடுத்த முத்தையா நகரில் சாலையில் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் முதலியார் வீதி, முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் தனகோபாலசாமி மகன் இமயநாதன் (43). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து சென்ற இமயநாதன் வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனிடையே நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, இமயநாதன் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இமயநாதன் உடனடியாக அருகே சென்று அவரிடம் கேட்டபோது, அந்த மர்ம நபர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுதொடர்பாக, இமய நாதன் போத்தனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...