இருளுடன்‌ போராட வேண்டாம்‌; ஒளி வந்தால்‌ இருள்‌ தானாக நீஈ்கிவிடும்‌ - சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: இருள்‌ என்னும்‌ அறியாமையுடன்‌ போராட வேண்டாம் தெளிவு என்னும்‌ ஓளியை ஏற்றினால்‌ அறியாமை என்னும் இருள்‌ தானாக மறைந்துவிடும்‌ என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி அறிக்கையில், கலாச்சார நீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர்‌ வதம்‌ செய்த தினமாகவும்‌, வனவாசம்‌ முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள்‌ தபங்களுடன்‌ வரவேற்ற தினமாகவும்‌ கொண்டாடப்படுகிறது.

அடிப்படையில்‌, இந்நாள்‌ அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும்‌ வெற்றியை பெறும்‌ சாத்தியத்தை குறிக்கும்‌ நாளாகும்‌. தபம்‌ என்றால்‌ வெளிச்சம்‌. பொதுவாக வெளிச்சம்‌ தெளிவோடும்‌, இருள்‌ அறியாமையோடும்‌ ஒப்பிடப்படுகிறது.

இருள்‌ என்பது வெளியில்‌ இருந்தாலும்‌, நமக்குள்‌ இருந்தாலும்‌ நம்‌ கண்‌ முன்‌ இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும்‌ வீட்டில்‌ விளக்கேற்றும்‌ தினம்‌ கிடையாது. நமக்குள்ளும்‌ விளக்கு ஏற்ற வேண்டும்‌.

வீட்டில்‌ விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள்‌ இருககிறது. மின்‌ விளக்குகள்‌ இல்லாத காலத்தில்‌ எண்ணெய்‌ விளக்கு என்பது மிகவும்‌ முக்கியமான விஷயமாக இருந்தது.

அப்போது சூரியன்‌ மறைந்த பிறகு விளக்கின்‌ தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன்‌ முக்கியத்துவத்தை நீங்கள்‌ உணர வேண்டுமென்றால்‌, தீபாவளி நாளன்று மின்‌ விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய்‌ விளக்குகளை வீட்டில்‌ ஏற்றுங்கள்‌.

அப்படி செய்தால்‌, அதன்‌ தாக்கத்தையும்‌ ஆனந்தத்தையும்‌ நீங்கள்‌ உணர்வீர்கள்‌. அது வீட்டின்‌ சூழ்நிலையையே மாற்றிவிடும்‌. பூஜை அறையில்‌ தினமும்‌ எண்ணெய்‌ விளக்குகளை ஏற்றினால்‌, உங்கள்‌ ஆரோக்கியமும்‌ மேம்படும்‌.

வெளியில்‌ மட்டுமின்றி உங்களுக்கு உள்ளும்‌ வெளிச்சம்‌ வரவேண்டும்‌. உங்களுக்குள்‌ தெளிவை ஏற்படுத்த ஈஷாவின்‌ மூலம்‌ பல யோக கருவிகளை நாங்கள்‌ இலவசமாக வழங்குகிறோம்‌. அதனை நீங்கள்‌ பயன்படுதீதி கொள்ளலாம்‌.

அறியாமை என்னும்‌ இருளை நீக்குவதற்கு அதனுடன்‌ நீங்கள்‌ போராட கூடாது. இருள்‌ நிறைந்த ஒரு இடத்தில்‌ ஒரு ஒளி விளக்கை ஏற்றினால்‌, இருள்‌ காணாமல்‌ போய்விடும்‌.

அதேபோல்‌, தெளிவு பிறந்தால்‌ அறியாமை இல்லாமல்‌ போய்விடும்‌. இந்த தீபாவளி திருநாள்‌ உங்கள்‌ வாழ்வில்‌ ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும்‌ என்னுடைய ஆசை, என்னுடைய அருள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...