பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தங்கப்பட்டறை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை.


16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தங்கப்பட்டறை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கெம்பட்டிக்காலனியில் தங்கப்பட்டறை வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதை மறைத்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ராஜசேகர் நெருங்கி பழகியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததையடுத்து, சிறுமியின் வீட்டில் ராஜசேகருடனான பழக்கம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முதலில் மறுத்த ராஜசேகர், பிறகு மருத்துவ பரிசோதனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. 

இதுதொடர்பாக மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையம்  பதிவு செய்த வழக்கு விசாரணை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்ட ராஜசேகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதால், மத்திய அரசின் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சம், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கில் தண்டனை பெற்ற ராஜசேகர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...