பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தங்கப்பட்டறை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை.


16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தங்கப்பட்டறை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கெம்பட்டிக்காலனியில் தங்கப்பட்டறை வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதை மறைத்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ராஜசேகர் நெருங்கி பழகியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததையடுத்து, சிறுமியின் வீட்டில் ராஜசேகருடனான பழக்கம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முதலில் மறுத்த ராஜசேகர், பிறகு மருத்துவ பரிசோதனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. 

இதுதொடர்பாக மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையம்  பதிவு செய்த வழக்கு விசாரணை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்ட ராஜசேகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதால், மத்திய அரசின் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சம், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கில் தண்டனை பெற்ற ராஜசேகர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...