கேரளா சிறையில் உள்ள இலங்கை முகமது அசாருதினை சந்தித்தாரா ஜமேசா முபின்?

2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். கேரள சிறையில் உள்ள இவரை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேசா சிறையில் சந்தித்தாரா என்ற கோணத்தில் வருகை பதிவேட்டை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: 2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். இவர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் இறந்த ஜமேசா முபின் என்பவர், அசாருதினை கேரள சிறையில் சந்தித்தாரா? என்ற அடிப்படையில், சிறையில் உள்ள வருகை பதிவேட்டில் முபின் கையெழுத்துட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் ஒன்பது தனிப்படையினர் வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 22 நபர்களை தனிப்படை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், முகமது தல்கா (25) உக்கடம், முகமது அசாருதீன் (23) உக்கடம், முகமது ரியாஸ் (27) G.M.நகர், ஃபிரோஸ் இஸ்மாயில் (27) G.M.நகர், முகமது நவாஸ் இஸ்மாயில் (26) G.M.நகர் என ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 ல் கைதான முகமது அசாருதினிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பிருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜமேஷாவிற்கு கார் தந்து உதவிய நபர் யார்? அவர் பின்னணி என்ன? அவர் ஏதேனும் அமைப்பில் இருக்கின்றாரா? என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...