இந்தி திணிப்புக்கு எதிராக பல்லடம் தபால் நிலையம் முற்றுகை - இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் SFI மற்றும் DYFI சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை இரண்டு அமைப்பினரும் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு மாநில குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



அதன் அடிப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழுக்கள் சார்பில் பல்லடம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அருள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர்.பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில துணை தலைவர் தோழர்.மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர்.சௌந்தர்யா, இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

என்.ஜீ.ஆர் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தி திணிப்பிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது மட்டுமல்லாமல், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...