கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார்..!

சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நேற்று இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், புதிய காவல் நிலையங்கள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்றவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது.



அதனடிப்படையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகள் போலீஸ்காரன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 



குறிப்பாக சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த சோதனைச் சாவடிகளில் இரவு, பகலாக காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 



மாநகர பகுதிக்கு வரும் அனைத்து இரு சக்கர, கார், சரக்கு வாகனங்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உக்கடம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (RAF) வீரர்களும், கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...