கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு - கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.16 வரை மட்டுமே வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் தக்காளியின் விலை மளமளவென சரிந்தது.

இதனிடையே தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி பத்து ரூபாய் முதல் 16 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளிக்கு முன்பு பெய்த மழையால் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதே இந்த விலை சரிவுக்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...