உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவிய போட்டி - தேர்வு செய்யப்படும் 15 ஓவியங்களுக்கு தலா ரூ.40,000 பரிசு

திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள திருக்குறள் தொடர்பான ஓவிய போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள ஓவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூடத்தின் சார்பில் ஓவிய போட்டி நடைபெற உள்ளது.

திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளர்களிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 15 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். .

ஓவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச்சாலை,

மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி,

சென்னை-600 113.

கூடுதல் தகவல்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...