நீலகிரி அருகே குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 6 காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுபாளையம் செல்லும் சாலையின் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே முகாமிட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி சாலைகளில் சுற்றித்திரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. மேலும் அவ்வப்போது, வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த யானைகள் சாலையோரம் உள்ள அடர்ந்த சோலைகளில் உள்ள பழங்களையம், தாவரங்களையும், மூங்கில்களையும் உண்டு வருகின்றன, இவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து விடாமல் வனத்துறையினர் தாெடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இருப்பினும் இந்த யானைகள் எந்த நேரத்திலும் சோலைப் பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரும் யானைகளையும் வாகன போக்குவரத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...