நீலகிரியில் கடந்த 30ஆம் தேதி தேசிய படை மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி தொடங்கிய நிலையில், 3 கட்ட மலையேற்ற பயிற்சிக்கு பின் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.

பயிற்சியின் முதல் கட்டமாக4 கிலோமீட்டர் தொலைவிலான அவா மலை முதல் சிம்ஸ்பூங்கா வரையில் மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.
இரண்டாம் நிலை பயிற்சியாக 8 கிலோமீட்டர் தொலைவு என்ற அடிப்படையில் சேலாஸில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையிலிருந்து கேந்தரை கிராமம் வழியாக பழத்தோட்டம் வந்தடையும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முத்தொரை பாலாடாவிலிருந்து முத்துனாடு மந்து வரையிலான மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இறுதியாக தேசிய படை மாணவிகள் பழங்குடி கிராமம் மற்றும் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மேலும் பழங்குடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்துவிழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியின் மூலம் பன்முக கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.


பயிற்சியின் முதல் கட்டமாக4 கிலோமீட்டர் தொலைவிலான அவா மலை முதல் சிம்ஸ்பூங்கா வரையில் மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.
இரண்டாம் நிலை பயிற்சியாக 8 கிலோமீட்டர் தொலைவு என்ற அடிப்படையில் சேலாஸில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையிலிருந்து கேந்தரை கிராமம் வழியாக பழத்தோட்டம் வந்தடையும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முத்தொரை பாலாடாவிலிருந்து முத்துனாடு மந்து வரையிலான மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இறுதியாக தேசிய படை மாணவிகள் பழங்குடி கிராமம் மற்றும் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மேலும் பழங்குடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்துவிழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியின் மூலம் பன்முக கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.