உலக புற்றுநோய் தினமாக இன்று பிப்ரவரி 4, அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்தால் நம்மை பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அனுபவிக்கும் வலி எதனினும் ஒப்பிடமுடியாதொன்று, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் அவர்களை முழுமையானதாகவும் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், வலிகளை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை கண்டு பரிதாப்படுவது அவர்களுக்கு முக்கியம் அல்ல மாறாக அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழவே ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையிலேயே நோயுற்ற ஒவ்வொரு வாழ விரும்புகிறார்கள். கோவை அரசு மருத்துவமனையில் தற்பொழுது 5திற்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளுக்கு ஆதரவாகவும் அவர்களை மகிழ்விக்கவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை அக்குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய புது உடைகள், விளையாட்டு பொருட்கள், இனிப்புகள் என பரிசளித்து அவர்களை மகிழ்வித்து குழந்தைகளின் முகத்தில் புன்னகையை பூக்க செய்தது.

மேலும் குழந்தைகள் பிரிவில் மற்ற நோய்க்காக சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கும் இனிப்பு விளையாட்டு பொருட்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இதற்காக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நல்ல உள்ளங்களுக்கு அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்தது.