பாலியஸ்டர்‌ பஞ்சின்‌ முக்கிய மூலப்பொருளான மோனோ எத்திலின்‌ கிளைக்கால்‌ (MEG) மீதான குவிப்பு வரி நிராகரிப்பு - சைமா வரவேற்பு

அரசின் இந்த‌ முடிவை வரவேற்கிறோம். அதற்கு உதவிய பிரதமர்‌ நரேந்திர மோடி மற்றும்‌ மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்‌ கோயல்‌ ஆகியோருக்கு சைமா சார்பாக அதன் தலைவர் ரவி சாம் தெரிவித்துள்ளார்.



கோவை: உலகலாவிய போட்டித்தன்மையைப்‌ பெறவும்‌, ஜவுளி மற்றும்‌ ஆடை உற்பத்தி மற்றும்‌ அதன்‌ ஏற்றுமதியின் அதிவேக வளர்ச்சி விகிதத்தை அடையவும்‌, மத்திய அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து, குறிப்பாக MMF மூலப்பொருட்கள்‌, இழைகள்‌ மற்றும்‌ இழை நூல்கள்‌ தொடர்பான கட்டமைப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்து வருகிறது.

உலகளவில் போட்டித்தன்மையைப்‌ பெறவும்‌, ஏற்றுமதியை அதிகரிக்கவும்‌, ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகள்‌, ஆஸ்திரேலியா மற்றும் மொரிஷியஸ்‌ நாடுகளுடன்‌ வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது மேலும்‌ பல்வேறு நாடுகளுடன்‌ வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்‌ ஏற்படுத்த பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

உலகளவில்‌, MMF ஜவுளி இழை மற்றும்‌ பருத்தி நுகர்வு விகிதம்‌ 65:35 ஆக உள்ளது. அதே சமயம்‌ இது இந்தியாவில்‌ நேர் மாறாக உள்ளது. MMF மூலப்பொருட்கள்‌ 23 சதவீதம்‌ வரை இந்தியாவில்‌ அதிகமாக இருந்ததே இதற்கு காரணமாகும்‌.

MMF ஜவுளி உற்பத்திப்‌ பிரிவில்‌ பெரிய அளவிலான முதலீட்டை ஊக்குவிப்பதற்காக உற்பத்தியுடன்‌ இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தையும்‌ அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில்‌, மத்திய வர்த்தக நிவாரண இயக்குனரகம்‌ 27.10.2022 தேதியிட்ட அறிவிப்பின்படி பாலியஸ்டர் பஞ்சு தயாரிக்க உபயோகிக்கும்‌ மூலப்பொருளான MEG மீது முன் மொழியப்பட்ட குவிப்பு வரியை நிராகரித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கோவை‌ தென்னிந்திய சைமா பஞ்சாலைகள்‌ சங்கத்தின்‌ தலைவா்‌ ரவிசாம்‌ தெரிவித்ததாவது;-

அரசின் இந்த‌ முடிவை வரவேற்கிறோம் என கூறி அதற்கு உதவிய பிரதமர்‌ நரேந்திர மோடி மற்றும்‌ மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்‌ கோயல்‌ ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்‌ கொண்டார்.

அதை தொடர்ந்து ஜவுளித்துறையின்‌ MMF பிரிவு, குறிப்பாக பாலியஸ்டர்‌ பஞ்சு, வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்‌ என்றும்‌, அது பல இலட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும்‌ என்றார் அதை தொடர்ந்து பேசிய ரவிசாம் தொழில்நுட்ப ஜவுளி வளர்ச்சிக்கு, பாலியஸ்டா்‌ ஸ்டேபிள்‌ ஃ.பைபர்‌ போதுமான அளவில்‌ உலக விலையில்‌ கிடைப்பது உறுதி செய்தால்‌ இந்த துறையின்‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும்‌.

நாடு பருத்தி தட்டுப்பாட்டை சந்திக்க தொடங்கியுள்ளதால்‌, பல நூற்றுக்கணக்கான நூற்பாலைகள்‌, நெசவாலைகள்‌, பின்னலாடை மற்றும்‌ ஆயத்த ஆடை பிரிவுகள்‌ பாலியஸ்டர்‌ ஜவுளி உற்பத்திக்கு தங்களை மாற்றிக்‌ கொண்டு வருகின்றன. அதன்‌ மூலம்‌ இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு, தங்களது நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க உதவுகின்றன என்று சைமா தலைவர்‌ ரவிசாம்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...