'பாரம்பரிய மாட்டு இனங்களை காப்பது நமது கடமை', கோவை கல்லூரி நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு .


கோவை, தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், கோவை ரோட்ராக்ட் கிளப்  சார்பில் "தமிழ்நாட்டின் கால்நடை மற்றும் உயிரி பன்முகத்தன்மை கலாச்சார விளையாட்டு" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுமத்தில் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'இந்தியாவில் முன்பு இருந்த மாட்டு இனங்கள் இன்று அழிந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களிலும் இன்ற பரவலாக இருக்ககூடிய மாட்டு இனம் 'ஜெர்சி'. ஜெர்சி இன மாடுகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வரவழைக்கப்பட்டு இனபெருக்கத்தின் மூலம் இன்று அதிகம் இந்தியாவில் பரவியுள்ளது. இவை அதிகம் பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. மேலும், 1945ம் ஆண்டு இரண்டாம் உலக போர் முடிந்த நிலையில் தற்பொழுது ரசாயனம் மூலமாகவும், பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும் அந்நிய பொருட்கள் இந்தியாவில் பெரும் இடத்தை பிடித்துள்ளது, இதுவே நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடந்த மாதம் ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் புரட்சி மூலமாக இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் மீண்டும் களம் கண்டுள்ளது. இறுதி கட்ட போராட்டத்தில் நுழைந்த சில சமூக விரோதிகளால் தான் போராட்டம் திசை மாறியது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்திரமாக தமிழகத்தில் நடை பெற முக்கிய காரணம் மாணவர்கள் தான். இந்தியாவில் மற்றும் தமிழநாட்டில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதும் நமது முக்கிய கடமை. அவ்வாறு பாதுகாத்தால் தான், நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு நம் பாரம்பரிய கால்நடைகளை கொண்டு சேர்க்க முடியும்', என்றார்.   



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...