கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதானோருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து முபினுடன் வெடி பொருட்களை காரில் ஏற்றியவர்கள் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜமேசா முபின் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



உக்கடம், கோட்டைமேடு அடுக்குமாடி குடியிருப்பு, புல்லுக்காடு, ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.



மேலும் கோட்டைமேடு பகுதியில் வாகனத்தில் சென்றவாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...