பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் உலா வந்த சிறுத்தை - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பல்லடம் அடுத்த கரடிவாவி குட்டை பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டத்தை சிலர் கண்ட நிலையில் சிசிடி காட்சி மற்றும் காலடி தடத்தை கொண்டு சிறுத்தை என உறுதி செய்யப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சிறுத்தை உலா வந்ததாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அடுத்த கரடிவாவி கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் விசைத்தறி உள்ளிட்டவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் நந்தவன தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை எற்படுத்தி உள்ளது.

நேற்று நள்ளிரவு மர்மமான விலங்கு ஒன்று தோட்டத்தை கடந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் சென்றதை சிலர் பார்த்துள்ளனர். சிறுத்தை போன்று இருப்பதாக சந்தேகம் அடைந்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.

அதில், அந்த மர்ம விலங்கு சிறுத்தைதான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இன்று காலை சிறுத்தையின் காலடி தடங்களை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மூலம் ஆய்வு செய்ததில், அது சிறுத்தையின் காலடித்தடம் தான் என்பதும் உறுதியானது.

நந்தவன குட்டைக்குள் ஏற்கனவே நரிகள் இருப்பதாக சந்தேகம் இருந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தையும் உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் இங்கு பிரதானமாக இருப்பதால் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தான சூழல் இருந்து வருகிறது.

எனவே, வனத்துறையினர் முகாமிட்டு, சிறுத்தையை குண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...