கோவை 5வது வார்டில் ஆலமரத்தடியில் நடைபெற்ற நகர சபை கூட்டம் - குறைகளை முன்வைத்த மக்கள்

5வது வார்டு மாநகராட்சியில் இணைந்து 10 ஆண்டுகளாகியும் அடிப்படை வளர்ச்சி அடையாததை அரசுக்கு தெரிவிக்கவே கிராம சபை போல் மரத்தடியில் நகர சபை கூட்டத்தை நடத்தியதாக மாமன்ற உறுப்பினர் GV நவீன்குமார் தெரிவித்தார்.



கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியின் 5வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், விசுவாசபுரம், ரெவென்யு நகர், செந்தில் நகர், திருக்குமரன் நகர், இன்கம் டேக்ஸ் காலனி, குழந்தைவேலு நகர், டெக்ஸ்டூல் நகர், சோமேஸ்வரர் நகர், இன்ஜினியரிங் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.



இன்று காலை 10:30 மணி அளவில் இன்கம்டேக்ஸ் காலனி பூங்காவில் உள்ள ஆலமரத்தடியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்ற மக்கள், தங்களது பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கோரிக்கைகளாக எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெரிவித்தனர்.



இந்த கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் G.V.நவீன்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி வார்டு சபா செயலாளர் மனோரஞ்சிதம், சுகாதார ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகர சபா பிரதிநிதி பிரான்சிஸ் அனைவரையும் வரவேற்றார்.



இந்த கூட்டத்தில், சுகாதார அதிகாரி அன்சார், திமுக நிர்வாகிகள் கண்ணன், சுந்தர், மயில்சாமி, சின்னச்சாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரகுராமன், கோபால், தாஸ், முருகேசன், முருகானந்தம், ரங்கசாமி, பாலு, கம்யூனிஸ்ட் கந்தசாமி, கொமதேக நிர்வாகிகள் கந்தசாமி, வேலுச்சாமி மற்றும் பல்வேறு நகர் நல அமைப்பு நிர்வாகிகள் அமிர்தராஜ், சக்திவேல், இளங்கோவன், LIC சுந்தரம்,வடிவேல், CTC ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



10 ஆண்டுகளாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட 5வது வார்டு, அடிப்படை வளர்ச்சியில் கிராம ஊராட்சியாகவே இருப்பதால், இதை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக நகர சபையை, கிராம சபா போல் மரத்தடியில் நடத்தப்பட்டதாக மாமன்ற உறுப்பினர் GV நவீன்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...