கோவையில் வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைபை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


கோவை: வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பான மீட்பு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் பின்வருமாறு.

1.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- 0422-1077,

0422-2301114

2.மாநகராட்சி பிரதான அலுவலகம்- 0422-2302323, 8190000200(whatsapp)

3.மாநகராட்சி வடக்கு- 0422-2243133

4.மாநகராட்சி தெற்கு- 0422-2252482

5.மாநகராட்சி கிழக்கு- 0422-2577056, 2572696

6.மாநகராட்சி மேற்கு- 0422-2551700

7.மாநகராட்சி மையம்- 0422-2215618

8.வால்பாறை- 04253-222394

9.பொள்ளாச்சி- 04259-220999

10.மேட்டுப்பாளையம்- 04254-222151

11.மதுக்கரை- 0422-2511815

12.கூடலூர்- 0422-2692402

13.கருமத்தம்ப்பட்டி- 0421-2333070

14.காரமடை- 04254-272315

15. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் - 04254- 222153

16. அன்னூர் வட்டாட்சியர்- 04254- 299908

17. வடக்கு வட்டாட்சியர் - 0422-2247831

18. தெற்கு வட்டாட்சியர் - 0422-2214225

19. சூலூர் வட்டாட்சியர் - 0422-2681000

20. பேரூர் வட்டாட்சியர் - 0422- 2606030

21. வட்டாட்சியர் மதுக்கரை- 0422-2622338

22. வட்டாட்சியர் கிணத்துக்கடவு- 04259-241000

23. வட்டாட்சியர் பொள்ளாச்சி- 04259-226625

24. வட்டாட்சியர் ஆனைமலை- 04253- 296100

25. வட்டாட்சியர் வால்பாறை- 04253- 222305

பொதுமக்கள், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) என்ற வாட்ஸ் ஆப் (Whatsapp) மூலம் அனுப்பலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...