கோவை உக்கடம் அருகே பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்பு

கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் ஐம்பொன் முருகன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின்படி விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் கோவில் சிலை உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.



சுமார் 3 மணி நேர சோதனையின் போது வீட்டில் இருந்த சுமார் 4 அடியுள்ள ஐம்பொன் முருகன் சிலை இருந்தது தெரியவந்தது.



அந்த சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் பாஸ்கரன் சுவாமி, தான் சிலை செய்யும் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டில் கண்டறியப்பட்ட சிலையும் அவரே செய்த சிலை என தெரிவித்ததாகவும், இது குறித்த விடியோவையும் போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது.



இருப்பினும், சிலையின் பழமை தன்மை மற்றும் மற்ற விவரங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...