கோவை சிங்காநல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு...!

சிங்காநல்லூர் அருகே கார் வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர், மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது. சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று இரவு இவர் தனது காரில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கோவை, சிங்காநல்லூர் அருகே வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர், காரின் முன்பகுதியில் மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், காரின் சில பகுதிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...