டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டாக்கத்தியை காட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற 5 பேர் கைது

சிறுமுகை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை, கோவை, தஞ்சையை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக நீலகிரியை சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடையின் ரூ.10 லட்சம் கலெக்‌ஷன் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.



அப்போது, சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த 4 பேர், விஜய் ஆனந்தை வழிமறித்து அரிவாளலை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.



பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.





இந்நிலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் விஜய் ஆனந்தை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (22), ஆகாஷ் (19), மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த ரவிக்கண்ணன் (19), கோவையை சேர்ந்த சதீஷ் (19) நான்கு பேரை கைது செய்தனர்.



இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த ஜூலை மாதம் இதே மேற்பார்வையாளரிடம் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (21), என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து பட்டாக் கத்தி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோவை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் செயின் பறிப்பு, கொள்ளை, இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...