கோவையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட வீடுகளை விற்பனை செய்யும் திமுக கவுன்சிலர் - ஆட்சியரிடம் மக்கள் மனு

தங்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை வார்டு கவுன்சிலர் சிவசக்தி, பிறருக்கு விற்பனை செய்வதாகவும், தங்கள் வீடுகளை தங்களுக்கே ஒதுக்கித் தரும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் காலனி பகுதியில் உள்ள மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திமுக வார்டு கவுன்சிலர் தனியாருக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



மாவட்ட ஆட்சியரிடம் செல்வபுரம் காலனி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,

செல்வபுரம் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து அப்பகுதி மக்கள் வந்த வீடுகள் பழுதடைந்துள்ளதால், குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இன்னும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வேலை தாமதமாக நடைபெற்று வருகிறது.

24 மணி நேர குடிநீர் வழங்காமல் பைப்புகள் மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே மின் இணைப்பு மற்றும் சிறுவாணி குடிநீர் வேலைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

மேலும் தற்பொழுது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த வீடுகளை இம்மாதத்திற்குள் அவர்களுக்கே ஒதுக்கீடு செய்து தர வேண்டும். குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க கூடாது.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆறு லட்சம் ஏழு லட்சம் என விலை பேசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 78 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவசக்தி மற்றும் அவரது அண்ணன் மணிகண்டன்(திமுக செல்வபுரம் பகுதி செயலாளர்) ஆகியோர் சில நபர்களை அழைத்து வந்து புரோக்கர் மூலம் வீடுகளை விற்பனை செய்து வருகிறார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டுகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...