கோவையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட வீடுகளை விற்பனை செய்யும் திமுக கவுன்சிலர் - ஆட்சியரிடம் மக்கள் மனு

தங்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை வார்டு கவுன்சிலர் சிவசக்தி, பிறருக்கு விற்பனை செய்வதாகவும், தங்கள் வீடுகளை தங்களுக்கே ஒதுக்கித் தரும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் காலனி பகுதியில் உள்ள மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திமுக வார்டு கவுன்சிலர் தனியாருக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



மாவட்ட ஆட்சியரிடம் செல்வபுரம் காலனி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,

செல்வபுரம் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து அப்பகுதி மக்கள் வந்த வீடுகள் பழுதடைந்துள்ளதால், குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இன்னும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வேலை தாமதமாக நடைபெற்று வருகிறது.

24 மணி நேர குடிநீர் வழங்காமல் பைப்புகள் மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே மின் இணைப்பு மற்றும் சிறுவாணி குடிநீர் வேலைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

மேலும் தற்பொழுது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த வீடுகளை இம்மாதத்திற்குள் அவர்களுக்கே ஒதுக்கீடு செய்து தர வேண்டும். குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க கூடாது.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆறு லட்சம் ஏழு லட்சம் என விலை பேசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 78 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவசக்தி மற்றும் அவரது அண்ணன் மணிகண்டன்(திமுக செல்வபுரம் பகுதி செயலாளர்) ஆகியோர் சில நபர்களை அழைத்து வந்து புரோக்கர் மூலம் வீடுகளை விற்பனை செய்து வருகிறார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டுகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...