டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை கைவிட வலியுறுத்தி வால்பாறையில் வரும் 13ஆம் தேதி உண்ணாவிரதம் - கோவையில் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ அறிவிப்பு

கோவை வால்பாறை சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை தமிழக அரசு கைவிடக்கோரி வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், மருத்துவ பணியாளர்கள் என யாரும் இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர்.



இதை தொடர்ந்து இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன் கூறியதாவது, இங்கு ஏற்கனவே வேலை செய்தவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்றார்.



இதனை தொடர்ந்து பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மருத்துவ பணியாளர் பற்றாக்குறை பிரச்சனையை உடனடியாக தமிழக அரசிடம் தெரிவித்து மருத்துவர்களை பணிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டேன் டீ நிர்வாகத்தை மூடும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதால், டேன் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, டேன் டீ நிர்வாகத்தை மூடுவதை கைவிட வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி வால்பாறையில் டேன் டீ தொழிலாளர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...