திருப்பூரில் ரூ.1.2 கோடி மதிப்பிலான துணை மின்நிலையத்தை திறந்து வைத்த ஆட்சியர் வினீத்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 1.2 கோடி செலவில், 16 mva திறன் உள்ள துணை மின் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இந்த 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என 6,500 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...