வீட்டை அபகரித்துக் கொண்ட தெருவில் விட்ட மகள் - கருணை கொலை செய்யக்கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி மும்தாஜ், தனது மகள் அனீஷ் ஆரிஃபா வீட்டை அபகரித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியதால் தன்னை கருணை கொலை செய்யும்படி ஆட்சியரிடம் மனு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பெஸ்ட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ். இவர் தனக்கு சொந்தமான வீட்டை தனது மகளே அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் தெரிவித்துள்ளதாவது, நானும் எனது கணவரும் எங்களது சொந்த உழைப்பில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கி வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் இறந்துவிடவே நான் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன்.

மேற்கொண்டு இருந்த மற்றொரு வீட்டின் வாடகையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில், எனது மூத்த மகள் அனீஸ் ஆரிபா மற்றும் அவரது கணவர் உமர் ஷரீஃப் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டில் குடியேறினர்.

பின்னர் காலப்போக்கில் மகளும் மருமகளும் சேர்ந்து என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். இதனால் நான் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறேன்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு முறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன். இந்த மனுக்கள், தற்போது தாசில்தார் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலையில், அந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றி தனது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...