காற்றாலை மூலம் கடந்த 8 மாதத்தில் 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி - காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்.


கோவை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை சூரிய ஒரி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை காற்று பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் தினசரி மொத்த மின்தேவையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிக அதிகம் பங்களிக்கும்.

இதுதொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது,

கடந்த காலங்கள் போல் இல்லாமல் இன்று காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட ஆற்றல் உற்பத்தித்துறை மீது மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த ஆண்டு காற்று பருவகாலம் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத்தை வீணடிக்காமல் தமிழக மின்வாரியம் உரிய முறையில் பெற்றுக் கொண்டது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பெறப்பட்ட மின்சாரத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை, இதுவரை இரண்டு தவணைகளாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகையும் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...