கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தி சிறப்பித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தகவல் தொழில்நுட்ப அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அரசு கேபிள் டிவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு கேபிள் டிவி யின் தற்போதைய நிலைமை, இதனை மேம்படுத்த செய்ய வேண்டிய செயல்கள், ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான சோதனைக் கற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தினார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பயிற்சி உதவி ஆட்சியர் செளமியா ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...