கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி உலா வரும் கரடிகள் - சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில் சமீப காலமாக இந்த தேயிலை தோட்டங்கள் வழியாக கரடிகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி ஊருக்குள் உலா வரும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன.



குறிப்பாக கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லக்கூடிய பெரியார் நகர் பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் நாள்தோறும் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவேணு பெரியார் நகரில் உள்ள வீட்டுக்குள் இரண்டு கரடிகள் புகுந்து உலா வந்து சண்டையிட்டன. கரடிகள் சண்டையிட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.



இதனிடையே நேற்று மீண்டும் இரண்டு கரடிகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்தன. இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் கரடிகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...