குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைகள் - வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூர் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதி மக்கள் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



கடந்த செப்டம்பர் மாதம் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் தெருக்களில் உலா வரும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட இந்த சிறுத்தைகள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், சில தினங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலா வந்தது, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், இம்முறை சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...