கோவை தெற்கு மண்டலம் ஈச்சனாரி பகுதிகளில்‌ புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ 97 மற்றும்‌ 100வது வார்டு பகுதிகளில்‌ 6 திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.



புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அங்கன்வாடி அமைப்பாளர்களிடம்‌ சாவியை வழங்கினார்கள்‌.

பின்னர் PMJVK திட்டத்தின் கீழ்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 15 எண்ணிக்கையில்‌ அங்கன்வாடி மையம் மற்றும்‌ 1 எண்ணிக்கையில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டுவதற்கு ரூ.245 இலட்சம்‌ ஓதுக்கீடு செய்யப்பட்டது.



PMJVK திட்டத்தின் முதற்கட்டமாக வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரி மற்றும்‌ கோண்டிஸ்‌ காலனி ஆகிய இடங்களிலும்‌, வார்டு எண்‌.100க்குட்பட்ட மேட்டூர்‌, அம்மன்புதூர்‌, அன்னாபுரம்‌, கணேசபுரம்‌ மற்றும்‌ ஈஸ்வரன்‌ செட்டியார்‌ வீதி உள்ளிட்ட 5 இடங்களிலும்‌, தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ 7 இடங்களில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சி கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர் ,உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்‌ சபரிராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...