கோவையில் மழைநீர் தேக்கம், அவிநாசி மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

தொடர் மழை காரணமாக அவிநாசி மேம்பால கீழ்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வரும் நிலையில், அப்பணிகளை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: இன்று காலை முதல், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக, அவிநாசி மேம்பால கீழ் பகுதியில் அதிகமான மழை நீர் தேங்குவது வழக்கமாக ஒன்றாக உள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் பம்ப் மூலம் மழைநீரை அகற்றி வருகின்றனர்.



நீர் வெளியேற்றப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...