கோவை வடவள்ளி அருகே துணை மின் நிலையத்தில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள் - ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம், பரபரப்பு

வடவள்ளியில் அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்குள் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வனத்துறையினர் யானைகளை பத்திரமாக விரட்டினர்.



கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன. அவ்வாறு வெளியேறும் காட்டு யானைகள் பாரதியார் பல்கலைகழகம் பின்புறம் உள்ள அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே வந்து மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் செல்லும்.

இந்நிலையில், நேற்றிரவு அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே குட்டிகளுடன் இறங்கிய காட்டு யானைகள், வழி தவறி வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



காட்டு யானைகள் அங்கிருந்த துணை மின் நிலைய வளாகத்திலேயே நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்தன. இந்நிலையில், யானை கூட்டத்தை கண்டு அச்சமடைந்த துணை மின் நிலைய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயரமான பகுதிக்கு சென்றனர்.

இதனையடுத்து யானைகள் குறித்து கோவை வனச்சரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் அங்கு வந்த, கோவை வனச்சரக வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி குட்டியுடன் இருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனை தொடர்ந்து மீண்டும் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அப்பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

இதனையடுத்து யானைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, எந்த சேதமும் ஏற்படாமல் பத்திரமாக விரட்டப்பட்டதால் துணை மின் நிலைய ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில், மேற்கொண்டு யானைகள், அப்பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...