கோவை டி.கே. வீதியில் சமையல் கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயம்

கோவை டி.கே. வீதியில் சமையல் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச பெற்று வருகிறார்.


கோவை: மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய். இவர் கோவை தியாகி குமரன் வீதியில் வாடகை வீட்டில் தங்கி தங்க நகை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் வீட்டின் மேற்கூறை உடைந்து சேதமானது.



மேலும் இதில், பிஜாய்க்கு அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து காயமடைந்த பிஜாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் பிஜாய் சமையல் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருத்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...