மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரி மேல்முடுதுறை மக்கள் ஆட்சியரிடம் மனு


குடிநீர் இன்றி மிகுந்த சிரமப்படுவதாகவும், உடனடியாக மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரியும் மேல்முடுதுறை மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மேல்முடுதுறை பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த 10 வருடத்திற்கும் மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பஞ்சாயத்து துறையின் மூலம் நிலத்தடி நீர் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுமையாக தடைபட்ட காரணத்தாலும், மோட்டார் பழுதடைத்துள்ளதாலும் கடந்த 5 மாதங்களாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீருக்காக பக்கத்து ஊர்களான கவுண்டம்பாளையம், காரணூர், கனுவக்கறை போன்ற ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம். 

இப்பிரச்சனை குறித்து முடுதுறை செயல்அலுவலர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால்வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் பயனில்லை.

மேலும், எங்கள் ஊரிலேயே 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட ஆற்று நீர் தேக்கத்தொட்டியும் நீர் ஊற்று நிலையமும் அமைத்து பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய நீர்தேக்கத் தொட்டி இருந்தும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி மக்கள் பயனடையும் வகையில் குடிநீருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...