உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் கடைபிடிக்கபட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.



அந்த வகையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொடர்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாடகங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது.



இந்நிகழ்ச்சியானது வரும் 23-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களிலும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள், எய்ட்ஸ் நோய் குறித்து தெரிந்து கொள்வதற்கும், எச்.ஐ.வி பற்றிய பயம் விலகிடவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குதல்- புறக்கணித்தல் போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடத்தபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் திரு.அறிவழகன், ஆய்வக நுட்பனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...