தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திருப்பி கிடைக்காததால் விரக்தி - கோவையில் தாய்,மகள் தற்கொலை செய்த சோகம்

சூலூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திரும்பி கிடைக்காத விரக்தியில் தாய்,மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: சூலூர் அருகே உள்ள அம்மாள் கோவில் பிள்ளையார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் காந்தரூபன்.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர் தான் ஏற்கனவே வசித்த பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு நடத்திய சீட்டில் கிடைக்க பெற்ற பணத்தை காந்தரூபனின் மனைவி பழனியம்மாள் வட்டிக்கு விட்டதாக கூறப்படுகிறது. அந்த பணம் தீபாவளி சமயத்தில் திரும்ப கிடைக்காத காரணத்தினால் சீட்டு போட்ட அனைவரும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் மனவேதனையில் மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுக் நச்சரித்து வந்ததால், விரக்தி அடைந்த காந்தரூபன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதில் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழக்க, காந்தரூபன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...