மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் 3 நாட்களாக தவிக்கும் 80 வயது மூதாட்டி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே மழை நீர் புகுந்த வீட்டில் 3 நாட்களாக வெளியேற முடியாமல் தவித்து வரும் 80 வயது மூதாட்டியை உடனடியாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள மற்றொரு குறுகிய வீட்டில் அவரது தாய் பாத்திமுத்து என்ற 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிலிலேயே அவர் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.



இந்நிலையில் மூதாட்டி இருக்கும் வீடு தாழ்வான பகுதி என்பதால் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீட்டின் மேற்கூரையும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் மூதாட்டியை வெளியே அழைத்து வர அவரது மகன் உள்ளிட்ட யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து அவர் உள்ளே சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று நாட்களாக மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் அவர் பரிதாபமாக தவித்து வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக மூதாட்டியை மீட்டு உரிய சிகிச்சையளித்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...