தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவன் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான அர்ஜுனா விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 25 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நாத்துக்கு மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டிற்கான அர்ஜுனா விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 25 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நாத்துக்கு மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.