கோவை மாவட்டம், காரேகவுண்டம்பாளையம் பகுதி 7-வது வார்டுக்குட்பட்ட மசாண்டிபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
மசாண்டிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அதில் 320-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள குடுப்பதாரர்களும் உள்ளனர்.
எங்கள் ஊரில் குளம், குட்டைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. மேலும், சில வருடகாலமாகவே எவ்வித வேலைவாய்ப்பும் இன்றி நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே, எங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக வேலை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.