காதலர் தினத்தை கண்டித்தும் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் கோரியும் பாரத் சேனா அமைப்பு ஆட்சியரிடம் மனு


கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் வைக்கக் கோரியும், காதலர் தினத்தைக் கண்டித்தும் மற்றும் அயல்நாட்டு குளிர்பானத்தை தடைசெய்யக் கோரியும் பாரத் சேனா அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதியன்று கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பயங்கரவாதிகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நடைபெற்று தற்போது 19 ஆண்டுகள் ஆவதால் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலையில் நினைவுத் தூண் அமைக்க கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அம்மனுவில் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் என்ற போர்வையில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்றும் பாரத் சேனா சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதைத்தொடர்ந்து, பாரத் சேனா கோவை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டி, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அயல்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் அயல்நாட்டுப் பொருட்களை விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...