கோவை சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை - நள்ளிரவில் மர்ம நபர் கைவரிசை

சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவருக்குசாரதா மில் சாலையில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில்,கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுமார் 12 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த செல்போன்களை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.



இதையடுத்து கடை உரிமையாளர் புண்ணியகோடி, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளுடன் போத்தனூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இதனிடையே புண்ணியக்கோடி கடை மட்டுமின்றி அடுத்தடுத்து 2 செல்போன் கடைகள் பூட்டையும் உடைத்து மர்ம திருடிச் சென்றதும் தெரியவந்தது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...