நீலகிரி உதகை அருகே பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1800 ரூபாய் லஞ்சம் வாங்கிய கீழ்குந்தா பேரூராட்சி இளநிலை பொறியாளர் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பள்ளிமனை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவர்தனது தொழிலாளர் குடியிருப்புக்கு பெயர் மாற்று சான்றிதழ் வழங்க கோரி கீழ்குந்தா பேரூராட்சியின் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி என்பவரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் பெயர் மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக சிவக்குமாரிடம் ஜெயலட்சுமி 1800 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்க செய்தனர்.

அப்போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக ஜெயலட்சுமியை பிடித்து கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், லஞ்சம் கேட்டதற்காக 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமாகவிதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து,இளநிலை பொறியாளரான 60 வயதான ஜெயலட்சுமி, கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...