டேன் டீ நிறுவனத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

டேன் டீ நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது எனக் கூறுவது தவறான காரணம் என்றும், நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும் எனவும் கூறினார்.



கோவை: டேன் டீ நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, வரும், 17ஆம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது.

இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கப்படுகிறது என விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.

நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதியில் அனுமதி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால் உள்துறை செயலாளரை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் பேரணி அமைதியை நிலை நாட்டும் முயற்சி தான். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடும் முறையை அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் இது தொடர்பாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தொடர் போராட்டம் மேற்கொள்வோம்.

அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது இது ஒரு ஏமாற்று வேலை.

தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலைவாய்ப்பை பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு தேயிலை கழகத்தை மூடுவது ஏற்புடையது அல்ல. இந்த முயற்சியை கைவிட வேண்டும். அது நட்டத்தில் இயங்குகிறது எனக்கூறுவது தவறான காரணம். நிர்வாக சீர்கேடு தான் காரணம், நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும்.

மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு, 10% இட ஒதுக்கீடு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...