முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் - வாகன ஒட்டிகளுக்கு காப்பக நிர்வாகம் அறிவுறுத்தல்

தொடர்மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு விலங்குகள் இடம்பெயர தொடங்கியுள்ளதால் வாகன ஒட்டிகள் கவனமாக பயணிக்கவும், விலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தல்.



நீலகிரி: தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கத் தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாககாட்டு யானைகள், காட்டு எருமைகள், கரடிகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன.

அவ்வாறு வரும் வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரங்களுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் மசினகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை அருகே காட்டு எருமைகள் மேய்ச்சலுக்காக கூட்டம் கூட்டமாக வருகின்றன. மேலும் அப்பகுதியில் கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், அவ்வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனபுலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...