24 மணி நேர குடிநீர் திட்டப்பணிக்காக கோவை மாநகராட்சிக்கு 'சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி' விருது

ஹைதராபாத்தில்‌ நடைபெற்ற Geosmart India விருது வழங்கும்‌ விழாவில்‌ கோவை மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் திட்டப்பணிக்காக 'சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 24 மணி நேர குடிநா்‌ திட்டம்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது குடிநர்‌ குழாய்‌, மேல்நிலைத்‌ தொட்டி அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ 24 மணி நேர குடிநீர் திட்டத்தில்‌ பல புதிய தொழில்‌ நுட்பங்களை உபயோகப்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்காக ஹைதராபாத்தில்‌ நடைபெற்ற Geosmart India விருது வழங்கும்‌ விழாவில்‌ கோவை மாநகராட்சியில்‌ 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக “சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி” என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த விருதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாபிடம், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ ஆகியோர்‌ ஒப்படைத்தனர்‌.

இந்த நிகழ்வில் சூயஸ்‌ நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம்‌ பட்நாயக்‌, செயலியை உருவாக்கிய சத்யநலம்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...