கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோவை: பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி தலைமையில் ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்கும் பணிகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.