கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் திறக்கப்படும் - ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் தகவல்

கோவை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட குளிசாதன அறையை திறக்க வந்த ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் செயலி மூலம் ஆட்டோ புக் செய்யும் பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையத்தின் பின்புறம் அனுமதி வழங்க சிறப்பு மையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டி தருவது கோவை இரயில் நிலையமாகும். கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் புதிய நவீன குளிர்சாதன காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 என்ற கட்டணத்தை செலுத்தி பயணிகள் காத்திருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.



இந்த நவீன குளிர்சாதன அறையை கோவை ரயல்வே முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இது குறித்து முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது:

பயணிகள் வசதிக்காக கட்டண முறையில் குளிர்சாதன அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக பயணிகள் வருவதால் முதல் நடைமேடையில் இந்த அறை ரூ.12 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் வசதிக்காக இந்த அறையை பயன்படுத்தி கொள்வார்கள். நவீன முறையில் அமைந்துள்ள அறையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.



மேலும் கோவை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கு நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தின் பின்புறம் செயலி மூலம் ஆட்டோ புக் செய்ய வசதி ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...