கதிர்நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது வனத்துறை

தடாகம் பகுதியில் கடந்த 1 மாதமாக சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு அங்கிருந்த தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை : ஆனைகட்டி மாங்கரை சுற்றி வனப்பகுதிகளால் நிறைந்த பகுதியாகும். இதனால்வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கமாக இருந்து வந்ததுள்ளன. சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இவைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தடாகம் பகுதியில் கடந்த 1 மாதமாக சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானைமற்றும் கூட்டமாக வரும் யானைகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில் கோவை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் உலா வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும்போது எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் யானை உலா வந்ததை அங்கு இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...