ஸ்ரீ நாராயகுரு கல்லூரியின் தொழில்முனைவோர் வளர்ச்சி பிரிவு மற்றும் தொழில்மேலாண்மை துறையும் இணைந்து முடி அழங்காரம், விரல் நக ஓவியம், மெகந்தி, மற்றும் மலர்த் தொட்டி ஆகிய பயிற்சிகளை சுயஉதவிக் குழுவினர்களுக்கு வளங்கினர்.

இப்பயிற்சியில் கோவை துடியலூர் அருகே இருக்கும் கூடம்பாளைய பஞ்சாயத்தின் தலைவர் ஆர்.ரவி, கவுன்சிலர் சாந்தாமணி, அருணாநகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஆரோக்கியசாமி, இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கஸ்தூரி, துறைத் தலைவர் எல்.சாந்தி, துணை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தீபக் குமார் சந்திரன், மற்றும் ஜி.ஞானமணி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுவினர் பங்கேற்று முடி அழங்காரம், விரல் நக ஓவியம், மெகந்தி, மற்றும் மலர்த் தொட்டி அழங்காரம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி பெற்றனர்.