வேளாண் பல்கலையில் மாபெரும் வேளாண் விழிப்புணர்வு விழா


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை வேளாண் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘அக்ரோநோவா 17’ பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பழங்கால அரிய வேளாண்பொருட்கள் கொண்ட வேளாண் அறிவியல் கண்காட்சியும், இக்கால வேளாண் தொழில்நுட்ப மாதிரிகளும் பங்கேற்பாளர் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன. 

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் மாணவ மாணவியர் அறிவு மற்றும் சிந்தனைத் திறனைத் தூண்டும்விதமாக பற்பல போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விஞ்ஞனிகளை அழைத்து வேளாண் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவின் மூலமாக வேளாண்மையின் பழமையினை இளைய சமுதாயத்திற்கு உணர்த்தி அதன் இன்றைய நிலைபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பங்கேற்கும் ஒவ்வொரு இளைய தலைமுறைக்கும் வேளாண்மை என் தலையாய கடமை என்னும் விதையினை மனதில் ஊன்ற அக்ரோநோவா 17 ஒரு அற ஆயுதமாக செயல்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...