ஐஐடி மும்பையினுடைய ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு கோவை பகுதியின் ஆதார மையமாக ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கையெழுத்திடப்பட்டது.

ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம்கான் இந்த ஒப்பந்தத்தில் ஐஐடியின் சார்பாக கையெழுத்திட்டார். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தரராமன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் ஓப்பன் ஸ்சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்துவது குறித்து ஐஐடி மும்மை பேராசிரியர்கள் பயிற்சியளிப்பார்கள்.
மேலும், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து அதுகுறித்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவர்.